Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts

7 October 2012

மகத்தான சந்திப்பு- வானவன் மாதேவி-வல்லபி


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த  மகத்தான இரு வாசகர்கள் பற்றி அவரது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அந்த உணர்வுப்பூர்வமான பதிவை அவரின் அனுமதியுடன் இங்கு பதிகிறேன்.அவசியம் பொறுமையா படிங்க. 


ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,