சிறியவர்
பெரியவர்
என்று பாராமல்
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
என்று எண்ணாமல்
ஏழை
செல்வந்தன்
என்ற பாகுபாடின்றி
என்னை தேடி
வந்தோரின் வாழ்க்கையின்
பயணத்தை பரவசமாக்குகிறேன்.
பாரம் என்று பாராமல்
பக்குவமாய் தாங்கும் என்னோடு
பயணிக்கும் வரை
பயணித்து விட்டு
பாச பார்வையை கூட
பரிசாக்காமல்
பாய்ந்தோடுவீர்கள்
பொறுத்துக் கொண்டு நானிருந்தும்
பொங்கி வரும் கோபத்தில்
பொதுவானவன் என்றும் பாராமல்
ஆத்திரத்தில் அடித்து நொறுக்குவதும்,
எல்லைமீறி எரித்து கருக்குவதும்
என்ன நியாயமோ மனிதமே?
-பேருந்து
பெரியவர்
என்று பாராமல்
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
என்று எண்ணாமல்
ஏழை
செல்வந்தன்
என்ற பாகுபாடின்றி
என்னை தேடி
வந்தோரின் வாழ்க்கையின்
பயணத்தை பரவசமாக்குகிறேன்.
பாரம் என்று பாராமல்
பக்குவமாய் தாங்கும் என்னோடு
பயணிக்கும் வரை
பயணித்து விட்டு
பாச பார்வையை கூட
பரிசாக்காமல்
பாய்ந்தோடுவீர்கள்
பொறுத்துக் கொண்டு நானிருந்தும்
பொங்கி வரும் கோபத்தில்
பொதுவானவன் என்றும் பாராமல்
ஆத்திரத்தில் அடித்து நொறுக்குவதும்,
எல்லைமீறி எரித்து கருக்குவதும்
என்ன நியாயமோ மனிதமே?
-பேருந்து
Tweet | ||||
அருமையான உணர்வுப்பூர்வமான கவிதை சகோ
ReplyDeleteஇப்படிக்கு
உலகதம்பி :-)
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக உலக தம்பி
Deleteஇப்படிக்கு
உள்ளூர் அண்ணன்
சிந்திக்க வேண்டிய கேள்வி...
ReplyDeleteஆம் சகோ, யோசிக்க வேண்டியவர்கள் யோசிக்கணும்
Delete